புரி என்றால் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதேபோல் சப்பாத்தி பெரியவர்களுக்கு எற்ற ஒன்று. இவை இரண்டிற்கும் எற்ற சைடிஷ் பற்றி தான் நாம் தற்போது பார்க்க போகிறோம். சென்னா மசாலா மிகவும் சத்துள்ள மற்றும் சுவையான சைடிஷ். இதன் செய்முறையை பற்றி காணலாம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டை கடலை 100கிராம்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
வெங்காயம் 200 கிராம்
தக்காளி 3
மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
மல்லித்தூள் 1 டீஸ்பூன்
சிரகத்தூள் ½ டீஸ்பூன்
கரம் மசாலா ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
கொத்தமல்லி இலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு

செய்முறை :

வெள்ளை கொண்டை கடலையை சுமார் 8மணி நேரம் முன்பாக தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் அதனை வேகவைத்துக் கொள்ளவும். வேகவைக்கும் பொழுது சிறிதளவு உப்பு சேர்க்கவும். பச்சை மிளகாய் மற்றும் தக்களியை தனித் தனியாக அறைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முதலில் கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். சூடான கடாயில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடேறிய பிறகு தறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன் நிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தற்போது அரைத்து வைத்துள்ள மிளகாயை சேர்த்து வதக்கவும் பின்னர் அறைத்த தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக கொதித்த அதன் நிறம் மாறிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மில்லிதூள், சிரகதூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் வேகவைத்த சென்னாவை தண்ணீருடனே சேர்த்து உற்றிக் கொள்ளவும். தனியாக தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து பின்னர் கரம்மசாலா சேர்த்து சிறுது நேரம் கழித்து கொத்தமல்லி இலை தூவி விட சூடான மற்றும் சுவையான சென்னா மசாலா தயார்.

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.