நாய்களை பலர் தான் வீட்டின் செல்லப்பிரா​ணியாக வளர்த்து வருகிறார்கள் இது ஒரு தனி கலை. நாய்களை பார்த்தாலே நிறைய பேர் அதை துரத்து அடிப்பர்கள். விருப்பமுள்ளவர்கள் மட்டும் தான் தனி கவனம் செலுத்தி வளர்ப்பார்கள். பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜபாளையம் நாய்களை Rajapalayam Dog தான் வீடுகளில் வளர்த்து வருகின்றார்கள்.

Rajapalayam Dog Images

Rajapalayam Dog (ராஜபாளையம் நாய்) மற்ற விலங்குகளை வேட்டையாடி தின்னும் குணம் படைத்தவை. புதியவர்களை பார்த்தால் அவர்களை பார்த்து பாய்ந்து விரட்டும் வீர குணம் உடையது இந்த ராஜபாளையம் நாய்கள். இந்த வகை நாய்களை பண்ணை மற்றும் வீடுகளில் காவலுக்கு வைத்து இருப்பர்கள்.

ராஜபாளையம் நாய்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள் உள்ளது. பார்பதற்கு உயரமாக வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற புள்ளிகளுடன் தலை மேல்பாகம் சிறிது குனிந்து கம்பீரமாக இருக்கும். இந்த வாகை நாய்கள் வாயும் மூக்கும் சிவப்பு கலந்த நிறத்தில் இருக்கும். ஆண் நாய்கள் பழுப்பு கலந்த நிறத்தில் இருக்கும்.

உணவு கொடுக்கும் முறை

நாய் குட்டி பிறந்து நாள் முதல் 40 நாள் வரை பாலை காய்ச்சி கொடுத்து வேண்டும் அதனுடன் இரவில் 2Ml கிரைப் வாட்டர் கலந்து கொடுத்து வந்தால் நாய் குட்டி நன்றாக வளரும். 40 நாள் முடிந்தவுடன் பால், காய்கறி, முட்டை கலந்த சாப்பாட்டை கூடுக்கலாம். ஆறு மாதம் வரை அசைவம் உணவுகளை தரக்கூடாது. அதன் பிறகு 100கிராம் எலும்புடன் கூடிய அசைவம் கொடுக்கலாம். மீன் முள்கள் நீக்கி தரவேண்டும்.

தடுப்பூசி அட்டவணை

குட்டி பிறந்து 35வது நாளில் இருந்து மாதம் ஒரு முறை குடல்புழு நீக்கம் செய்ய வேண்டும். 55ம் நாளில் வைரஸ் தடுப்பூசி போட வேண்டும். 60வது நாள் ஆஸ்ட்டோ மற்றும் கால்சியம் டானிக் கொடுக்க வேண்டும். 75ம் நாள் ஆறுவகை நோய் தடுப்பூசி போட வேண்டும். அதன் பின் ஆண்டுக்கு ஒரு முறை வெறிநாய் தடுப்பூசி போட வேண்டும்.

Yaathith Farms producing the huge amount of Nattu kozhi muttai & meat in pondicherry & Tamilnadu.